2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944

2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944

இரண்டாம் உலகக் போரில் அமெரிக்காவின் டராவா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இதே தேதியில் 1944-ம் ஆண்டு நடைபெற்றது.

 

இரண்டாம் உலகக் போரில் அமெரிக்காவின் டராவா என்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இதே தேதியில் 1944-ம் ஆண்டு நடைபெற்றது.

இதே தேதியில் நடந்த மற்ற முக்கிய நிகழ்வுகள்:-

* 1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
* 1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு ராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
* 1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
* 1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் * 1971-ல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997-ல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* 1966 - சிலோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் பலியானார்கள்.
* 1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவர் 2,00,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தார். அவரோ அல்லது பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
* 1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
* 1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
* 2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* 2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.