வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்- சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்- சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

முந்தல்-கிரிமட்டாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நபரொருவரை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் 12 துளைகள் இருந்ததோடு, அங்கிருந்து சில வெடிமருந்துகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த வீட்டு உரிமையாளர், நேற்று காலை அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.