இந்தியாவில் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 90.5 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90.5 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 84.78 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 90,50,598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 564 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 49,715 பேர் குணமடைந்துள்ளனர். 

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,39,747பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.