உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விவசாயத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விவசாயத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தற்போது வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பில் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக தொடர்பு தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் சில பாகங்களில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்க வேண்டும். விவசாயிகள், 1920 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து விவசாயிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வட மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவபாதம் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.