நவம்பர் மாதம் ஆபத்தானது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், உயிரிழப்புக்களும் அதிகளவில் பதிவாகி வருகின்றமையினால், கடந்த ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அதிக ஆபத்தான மாதமாக அமையும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அதன் அதிகாரியான வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.