சிற்றூர்தியை முந்திச்செல்ல முற்பட்ட பேருந்து- 3 வயது குழந்தைக்கு காத்திருந்த ஆபத்து

சிற்றூர்தியை முந்திச்செல்ல முற்பட்ட பேருந்து- 3 வயது குழந்தைக்கு காத்திருந்த ஆபத்து

இரத்தினபுரி, பெலமடுல்ல பிரதான வீதியின் திப்பிடிகல பிரதேசத்தில் சிற்றூர்தி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தியில் பயணித்த 3 வது ஆண் குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேகமாக பயணித்த சிற்றூர்தியை பேருந்து முந்திச் செல்ல முற்படுகையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், இதன்போது சிற்றூர்தியில் பயணித்த குறித்த குழந்தை ஜன்னல் வழியாக தலையை வெளியே இட்டு வந்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பிலா மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.