தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடஇந்தியாவின் அயோத்தியில் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
6 லட்சத்து 6569 தீபங்கள் ஏற்றப்பட்டு அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அந்த தீபங்கள் 45 நிமிடங்களில் ஏற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொள்ளாது சமூக இடைவெளி சட்டத்தை மீறி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் மூலம் இதனை கண்காணித்த கின்னஸ் குழு நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் குறித்த சாதனை சான்றிதழை கையளித்துள்ளது.