இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக 30 வருடங்களுக்குள் திரும்பி செலுத்தக் கூடிய வகையில் குறைந்த வட்டியுடனான வீடமைப்புக் கடனை வழங்குவதற்காக வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதன்மூலம் கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.