கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன...!

கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன...!

இன்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் கரையோர மார்க்கத்தின் பாணந்துறை வரையில் ஒரு வழி தடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி வரையான தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளுக்காக இந்த ஒரு வழி தடம் மூடப்பட்டிருக்கும் என தொடருந்து கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதிக்கான பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.