அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
நாட்டில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்றையதினம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளாந்த அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணியாளர்களை அழைக்கும் தீர்மானத்தை, அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய பணியாளர்கள், தற்போது நடைமுறையில் உள்ளவாறு, வீடுகளில் இருந்தே தமது அலுவல்களை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.