
கொரோனா வைரஸ் : சென்னையில் புதிதாக 40 பேர் உயிரிழப்பு!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் வரையில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அத்துடன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உட்பட 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை சென்னையை பொருத்தவரையில் மண்டலவாரியாக ராயபுரம் மண்டலத்தில் அதிகூடிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முறையே தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர், திருவிக நகர், அடையாறு ஆகிய மண்டலங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.