கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபட யாழில் மாபெரும் யாகம்

கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபட யாழில் மாபெரும் யாகம்

கொரோனா தொற்று நோயிலிருந்து விடுபட இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் யாகம் நடாத்தப்பட்டது.

கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டு வரவேண்டும் என்பதற்காகச் சகல இந்து ஆலயங்களிலும் ஹோமம், விசேட வழிபாடுகளைச் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினால் மாலை 4.30 மணிக்கு வண்ணார்ப்பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுதர்சன ஹோமமும் விசேட வழிபாடுகளும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெற்றன.

இந்த பிரார்த்தனையின் ஊடாக சகல மக்களும் நோயிலிருந்து விடுபட்டு தங்களுடைய வழமையான வாழ்க்கையை வாழ்வதற்கு இறைவனை வேண்டிக் குறித்த யாகம் நடத்தப்பட்டது.

யாகத்தில் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாகப் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.