கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,929ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 8,285 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 35 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.