
கொவிட்-19ஆல் மேலும் ஒருவர் பலி
கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
78 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை தெரியவந்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்துக்கான காரணம் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட இருதய கோளாறு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் எவையும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை