
மாநிலங்களவை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!
ஒன்பது மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 19 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதன்படி குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதன்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும் 245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலமும் 100ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.