
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- அ.தி.மு.க., தி.மு.க. பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளார்.
அதேபோல், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்துவரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
காணொளி தொடர்பாடல் மூலம் இடம்பெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.