சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்கு கால அவகாசம்!

சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்கு கால அவகாசம்!

கொரோனா தொற்று காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து அபராதம் செலுத்த முடியாத இக்கட்டான நிலையிலுள்ள சாரதிகளுக்காக சலுகைக் கொள்கையைப் பின்பற்ற தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் படி கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தபால் அலுவலகங்களின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட நாட்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நாட்கள் இவற்றைத் தவிர்த்து ஏனைய நாட்களைக் கணக்கில் கொண்டு போக்குவரத்து அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான அனுமதியை நிதி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.