ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

போலித் தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.

தற்போது நாட்டில் பொது மக்களை பரபரப்படைய செய்யும் தகவல்கள் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்,

தனிமைப்படுத்தல் சட்ட உத்தரவுகளுக்கு முரணாக செயற்படும் அல்லது உண்மை தகவல்களை மறைத்து ஆவணங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்யும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது நாட்டில் காணப்படும் நிலைமையில், மக்களின் தகவல்களை பதிவு செய்யும் ஆவணங்களில் எந்த நபராவது பொய்யான தகவல்களை பதிவு செய்தால், அது போலி ஆவணம் தயாரித்தமை தொடர்பான குற்றத்தின் கீழ் வரும்.

இந்த சட்டத்தின் 399 ஷரத்தின் குறிப்பிடப்பட்டுள்ள போன்று வேறு ஒரு நபர் போல் செயற்பட்டு குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியான குற்றத்தை செய்யும் நபர்களுக்கு எதிராக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய ஏற்பாடுகள் சட்டத்தில் இருப்பதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.