எதிர்வீட்டு இளைஞருடன் கள்ளக்காதல்.. கணவர், உறவினர்கள் எதிர்ப்பால் மனைவி தற்கொலை..

எதிர்வீட்டு இளைஞருடன் கள்ளக்காதல்.. கணவர், உறவினர்கள் எதிர்ப்பால் மனைவி தற்கொலை..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவண்ணா. 15 வருடங்களுக்கு முன்பு தாளவாடி அருகில் உள்ள திகினார் கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. சிவண்ணா மனைவி குமாரிக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இரு வீட்டாருக்கும் விவகாரம் தெரிந்து அடிக்கடி பிரச்னை நடந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குமாரி திங்கட்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற குமாரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குமாரியின் இறப்பிற்கு எதிர்வீட்டைச் சேர்ந்த தினேஷ்தான் காரணம் எனக்கூறி, உடலை அவர் வீட்டு முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினேசை கைது செய்தால்தான் குமாரியின் உடலை எடுப்போம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சென்ற சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா, தாளவாடி ஆய்வாளர் அன்பரசு ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலைமறைவான தினேஷ் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக்கூறி, அவருடைய பெற்றோரை, ஆசனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து தினேஷ் வீட்டு வாசலில் இருந்த குமாரியின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

 
குமாரியின் கணவர் சிவண்ணா அளித்த புகாரின் பேரில் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.