ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எதிர்வரும் வார இறுதியில் காவல் துறை சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், மேல் மாகாணத்தில் 112 காவல் துறை பிரிவுகளிலும், குளியாபிட்டி, எஹெலியகொடை, மற்றும் குருநாகலை மாநகர சபை அதிகார பிரிவுகளில் தற்பொழுதும் இவ்வாறு மக்கள் நடமாட்டத்தினை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு 26 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.