இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் பலி...!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் பலி...!

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் இன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - 2 ஐ சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர், பிம்புற ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்தார்.

கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டு, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணித்தார்.

இதேவேளை, கொழும்பு - 12 ஐ சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், தமது வீட்டில் மரணித்துள்ளார்.

இதனை அடுத்து, சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - 14 ஐ சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் தமது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - 15 பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர் தமது வீட்டில் வைத்து உயிரிழந்தார்.

இதனை அடுத்து, சடலம் மீதான மரண பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.