கொவிட்19 நோயால் 222 காவற்துறை அதிகாரிகள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்..!

கொவிட்19 நோயால் 222 காவற்துறை அதிகாரிகள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்..!

இலங்கையில் கொவிட்19 நோயால் 222 காவற்துறை அதிகாரிகள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பொறளையை மையப்படுத்திய 41 காவற்துறை அலுவலர்களுக்கு நேற்று கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டன.

இதன்படி பொறளை காவற்துறை நிலையத்தில் மாத்திரம் 56 அதிகாரிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டன.

இதேவேளை பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேர் கொவிட் 19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அத்துடன் அங்கு 2 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்

இதன்படி அவர்களுடன் தொடர்புபட்ட சுமார் 1407 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.