கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்..

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்..

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு நகரில் உள்ள 18 அஞ்சல் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாக காவற்துறை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்கீழ் சுமார் 13 ஆயிரம் பேர் பலன்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.