
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா?
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜீ.இளமநாதன் தெரிவித்தார்
வெலிசறை பொருளாதார மையத்தில், மொத்த விற்பனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மையங்கள் மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மொத்த விற்பனைகளுக்காக கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுபாடுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.