மொனராகலை சிறைச்சாலை கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

மொனராகலை சிறைச்சாலை கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை

மொனராகலை சிறைச்சாலை அதிகாரிகளின் தாக்குதல்களால் கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பதுளை சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கைதியினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு உட்பட்டதை தொடர்ந்து, மேலும் சில சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து கைதியை தாக்கியுள்ளனர்.

இதன்போதே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அம்பாறையை சேர்ந்த 40 வயதான கைதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.