மீண்டும் முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

மீண்டும் முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் முட்டையின் விலையில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இதை தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே முட்டையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, முட்டையின் கொள்வனவு தற்போது குறைந்துள்ளதோடு, ஊரடங்கால் முட்டை விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே முட்டையின் விலையில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தின் போது முட்டை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.