
எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று (03) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 3 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைப்பு விடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு நபர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.