ஊரடங்கு உத்தரவினை மீறிய 180 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.
அத்துடன் 25 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கினை மீறிய 1992 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026