
இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
ஊவா, கிழக்கு வட மத்திய, மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாககூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் முகில் மேடுகளுடனான கால நிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வ கூறப்பட்டுள்ளது.