மேல்மாகாணத்தில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

மேல்மாகாணத்தில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

மேல்மாகாணத்தில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை மறுதினம் (04) திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரத்மலானை, நாராஹென்பிட, போகுந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலைய ஊழியர்களுக்கு நாளை பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையங்களில் சில்லறை வரத்தக நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம் வாய்ப்புகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.