சற்று முன்னர் பதிவான 22 ஆவது கொரோனா மரணம்..!

சற்று முன்னர் பதிவான 22 ஆவது கொரோனா மரணம்..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது