மீண்டும் 5,000 ரூபாய்....! விபரங்கள் இதோ...!

மீண்டும் 5,000 ரூபாய்....! விபரங்கள் இதோ...!

கொவிட் 19 வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மீண்டும் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரங்களை இழந்த, நிவாரணம் வழங்க வேண்டும் என அடையாளம் காணப்படும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், சுகாதார அதிகாரிகளின் பரிந்துறைக்கு அமைவாக நாடு முழுவதிலும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிவாரணத்தை வழங்கும் பணிகள் மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம குழுக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஒருங்கிணைப்பு மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.