கொரோனா பரிசோதனை செய்ய தாயை அழைத்துச் சென்றதால் மகன் தற்கொலை

கொரோனா பரிசோதனை செய்ய தாயை அழைத்துச் சென்றதால் மகன் தற்கொலை

கொழும்பில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தாயாரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய 25 வயதான மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹோமாகம தோலவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாயார் மஹரகமவில் உள்ள மீன் கடையில் மீன் கொள்வனவு செய்திருக்கிறார்.

அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.