பிரித்தானியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விமானங்கள்!
பிரித்தானியாவில் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி, விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் ஸ்கொட்லாந்திலுள்ள அபேர்டீன் சர்வதேச விமான நிலையத்திலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு விமானத்தின் முன்புறப்பகுதி மற்றொரு விமானத்தின் என்ஜினின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
லோகன் எயார் நிறுவனத்தின் விமானமொன்றும் பிளைபீ நிறுவன விமானமொன்றுமே இவ்வாறு மோதிக்கொண்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற போது, இரு விமானங்களிலும் பயணிகள், ஊழியர்கள் எவரும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
லோகன் எயார் எம்ப்ரர் 145 விமானம், பிளைபீ பொம்பார்டியர் கியூ400 ரக விமானத்துடன் மோதியுள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு விமானங்களும் ஒன்றுடனொன்று நெருக்கப்பட்ட நிலையில் பல மணித்தியாலங்கள் நின்றுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.