ஜனாதிபதிக்கும் அமெரிக்கா இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு...!

ஜனாதிபதிக்கும் அமெரிக்கா இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு...!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெ்றறுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் சற்று முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதோடு கலந்துரையாடல் ஒன்றும் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.