றெபிட் எண்டிஜன் டெஸ்ட் பரிசோதனை முறைமை தொடர்பில் அவதானம்..!
கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்கு றெபிட் எண்டிஜன் டெஸ்ட் ( Rapid Antigen Test) என்ற விரைவான பிறபொருள் எதிரியாக்கி பரிசோதனை முறைமையை மேற்கொள்வது தொடர்பில் சுகாதாரத் துறையினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மாத்திரம் மேற்கொண்டு நோயாளர்களை கண்டறிவதில் மட்டுப்பாடான நிலைமை இருப்பதனால், இந்த பரிசோதனை முறைமையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமுதாய வைத்தியர் நிபுணர் ஷெரின் இமானுவெல் பாலசிங்கம் இதனைத் தெரிவித்தார்.