ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை...!

ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை...!

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமாக கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் மேல், சப்ரகமுவ, ஆகிய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவங்களிலும், பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் மழை பெய்யும் பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.