கொட்டகலையில் மூவருக்கு கொரோனா தொற்று

கொட்டகலையில் மூவருக்கு கொரோனா தொற்று

நுவரெலிய-கொட்டகலை பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளன.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போதே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.