5,000 ரூபா கொடுப்பனவின் போதான மோசடிகள் தொடர்பில் தீவிர விசாரணை

5,000 ரூபா கொடுப்பனவின் போதான மோசடிகள் தொடர்பில் தீவிர விசாரணை

கொரோனா தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

5,000 ரூபா கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் கணக்காய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.