பொது மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்துவது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள், ஏனைய விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
திருமண விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோசனை பெற்று, பொலிஸாருக்கு அறிவித்து திருமணத்தை நடத்த முடியும்.
ஆனால் முக்கியமான உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்த வேண்டும்.
இறுதி சடங்கின் போது பிறிதொரு இடத்திலிருந்து வருதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த இடத்திருந்து ஊடரங்கு பிறப்பிக்காத இடத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நெருங்கிய உறவினராக இருந்தால் அனுமதி வழங்கப்படும் என்றார்.