மின் கட்டணங்களை பல தவணைகளாக செலுத்துவதற்கு வாய்ப்பு

மின் கட்டணங்களை பல தவணைகளாக செலுத்துவதற்கு வாய்ப்பு

மின் பாவனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டணங்களை பல தணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, எந்தவொரு காரணங்களுக்காகவும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டண பட்டியல் சரியானது என அதன் தலைவர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, நுகர்வோர் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.