நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.