கொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்

கொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் முதல் புரமோவே வழக்கம்போல் தாமதமாகத்தான் வந்துள்ளது. சற்று முன் வெளியான முதல் புரமோவில், ‘கொளுத்திப் போடணும் கொளுத்தி போடணும் என்று கூறியவர் கையிலே அடித்துவிட்டார், போட்டியாக இருக்க வேண்டியவர்கள் போடா வாடா என்று தரம் குறைந்துவிட்டார்கள்’ என்று கூறிவிட்டு பின்னர் கையில் இருக்கும் செங்கோலை காட்டி, ’இது யார் கையில் இருக்கணும்ங்கிறது ரொம்ப முக்கியம், இருக்கிற நிலைமையைப் பார்த்தால் நம்ம கையில தான் எடுக்கனும் போல இருக்கு’ என்று கூறி வழக்கம்போல் அரசியல் பேசினார்.

கமல்ஹாசன் கையில் மக்கள் ’ஆட்சி ’என்ற செங்கோலை கொடுக்கின்றார்களோ இல்லையோ, பிக்பாஸ் கொடுத்துள்ள இந்த செங்கோலை வைத்து இன்று கமல்ஹாசன் தனது விசாரணையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுரேஷ், சனம் ஆகிய இருவரையும் இன்று கண்டிப்பாரா? குறும்படம் ஏதேனும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் செயல்பாட்டை மையப்படுத்தி பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அவற்றில் சில மீம்ஸ்களை தற்போது பார்ப்போம்.