சற்றுமுன்னர் மேலும் இரண்டு காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

சற்றுமுன்னர் மேலும் இரண்டு காவற்துறை பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு

கொத்தட்டுவ மற்றும் முல்லேரியா ஆகிய காவற்துறை அதிகாரப் பிரதேசங்களுக்கு இன்று இரவு 7 மணிமுதல் மீள் அறிவித்தல் வரையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் 51 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் 33 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும், கொழும்பு மாவட்டத்தில் 9 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும், குளியாப்பிட்டியவில் 5 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும்;, களுத்துறை மாவட்டத்தில் 3 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு அமுலில் இருக்கிறது.