வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நற்செய்தி

வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நற்செய்தி

வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை பெறுவதற்கு எதிர்பார்த்து காத்திருப்போருக்கான இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கைகள் இன்று (17) தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஹொங்கொங், ருமேனியா, போலந்து மற்றும் செக் குடியரவு ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற எதிர்பார்ப்போர் இன்று முதல் பதிவு செய்து கொள்ள முடியுமென அதன் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் பணிபுரிந்து தற்போது விடுமுறையில் இலங்கை வந்தவர்களுக்கு மீண்டும் தமது பணியிடங்களுக்கு செல்ல காத்திருப்போருக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கான பதிவுகள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.