அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 60 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது

அதேநேரம், கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 404 பேர் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.