ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது..!

ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 76 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் மேலும் கூறியுள்ளது.