மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் (அக்.201982)

மாஸ்கோவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் பலியானார்கள் (அக்.201982)

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது. * 1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில்

 

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்நது போட்டியின் போது ஒரு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 66 ரசிகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது. *  1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. *  1941 - கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர். *  1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.

*  1944 - கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர். *  1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது. *  1946 - புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. *  1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது. *  1976 - மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர். *  1982 - இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. *  1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.