கலைத்துறையில் அரசியல் தலையீடு தேவையற்றது - விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

கலைத்துறையில் அரசியல் தலையீடு தேவையற்றது - விஜய்சேதுபதிக்கு சரத்குமார் ஆதரவு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.

ஆனால், ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குரல் கொடுத்ததாக கூறி அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது முகநூல் பக்கத்தில் கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என கூறி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில், "கலைஞர்களுக்கு அணைகட்டக் கூடாது. எல்லைகளை கடந்து கதைகளை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு" என கூறி நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது