நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை!

நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை முன்னிட்டு விசேட நடவடிக்கை!

நீதி அமைச்சின் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் மூலமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையின் கீழ் பொதுமக்கள் நீதி அமைச்சுக்கு வருகை தருவதில் காணப்படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நீதி அமைச்சர் அலி சப்ரியின் ஆலோசனையின் அடிப்படையில், திங்கட்கிழமைகளில் இடம்பெறும் பொதுமக்கள் சந்திப்பு தினத்தை இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்கான விசேட இணைய பிரிவு ஒன்றும் நீதி அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைப்பது தொடர்பான வழிகாட்டல்களை நீதி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினத்துக்கான முறைப்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முன்னர் முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.